ஆப்நகரம்

நெல்லை மக்கள் பயப்பட வேண்டாம், அதிகாரி அபூர்வா சூப்பர் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக் காலத்தில் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல் அளித்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2020, 4:50 pm
விரைவில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கவுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது.
Samayam Tamil நெல்லை மக்கள் பயப்பட வேண்டாம், அதிகாரி அபூர்வா சூப்பர் தகவல்!
நெல்லை மக்கள் பயப்பட வேண்டாம், அதிகாரி அபூர்வா சூப்பர் தகவல்!


இதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உயர்கல்வித் துறை செயலாளருமான அபூர்வா பேசியதாவது:
மழைக் காலத்தில் மக்கள் சரியான இடங்களைப் பார்த்து ஒதுங்க வேண்டும். மரத்தின் அடியிலே, பழைய கட்டிடத்தின் அடியிலோ ஒதுங்கக் கூடாது.

இதற்கிடையே இந்த வடகிழக்கு பருவ காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் முதல்நிலை மீட்பார்கள் 63 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முறையாக அவர்கள் தொடர்வார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக 2ஆம் நிலை பணியாளர்கள் 200 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் மழை வெள்ளம் ஏற்பட்டால், பாம்பு பிடிக்க 30 பேர், வெள்ளத்தில் நீந்திச் செல்ல, மரம் ஏற 300 பேர், கால்நடைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்க 16 பேர் எனப் பல பிரிவுகள் உண்டாக்கப்பட்டு அதற்கென தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இறந்து மிதந்த மூதாட்டி... கொலையா என போலீசார் விசாரணை

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை அளவை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்குள் வரும் நீரும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அதேபோல் பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கவும் முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி