ஆப்நகரம்

பட்டா விவகாரம்: நெல்லை கலெக்டரை சந்தித்த எதிர்க்கட்சியினர்!

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 1,500 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டும் பட்டா வழங்கப்படவில்லை , இவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க கோரி திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

Samayam Tamil 2 Oct 2020, 12:14 am
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 1, 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர்.
Samayam Tamil nellai dmk


இவர்கள் பட்டா கேட்டு தொடர்ந்து அரசிடம் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், பட்டா வழங்க அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் வசிப்பிடத்திற்கான பணத்தையும் கட்டிவிட்டனர்.

ஆனால் ஆணை பிறப்பித்தும், முறையாக பணம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இடத்தை காலி பண்ண முடியாது: கலெக்டர் அலுவலகத்தில் அருந்ததியர் போராட்டம்!

இதனையடுத்து அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வாகாப் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் , திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி