ஆப்நகரம்

புயல் நாளிலும் கழகக் கூட்டம்... ஸ்டாலின் தேர்தல் ஆலோசனை

தென்காசி மாவட்ட சட்டமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

Samayam Tamil 26 Nov 2020, 8:58 am
தென்காசியில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தென்காசி மாவட்ட சட்டமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
Samayam Tamil stalin


தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கொரோனா தடை உத்தரவு காரணமாக காணொளி காட்சி மூலம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் இன்று நெல்லை, தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழகம் மீட்ப்போம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயளாளர் சிவபத்தமநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் துரை ஆகியோருடன் நடைபெற்றது.

நிவர் புயல் கரையை கடந்தபின் என்ன நடக்கும்? லேட்டஸ்ட் அப்டேட்!

அப்போது வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் குறித்தும், தென்காசி மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முன்னதாக கழக மூத்த உறுப்பினர்களுக்கு உதவி தொகை மற்றும் மரியாதை செய்து கெளரவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி