ஆப்நகரம்

கோயில் கல்யாணம், குடி, ஆடல் பாடல்... அப்புறம் என்ன அடிதடி தான்!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் கோவிலில் நடந்த திருமண விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 30 Oct 2020, 8:38 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சங்கரன்கோவில் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர் .
Samayam Tamil கோயில்  சண்டை
கோயில் கல்யாண கலாட்டா


திருமணம் முடிந்து அனைவரும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சில இளைஞர்கள் மது போதையில் விசிலடித்து ஆடி பாடியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட மற்றொரு கும்பல் அதை தட்டிக் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு கும்பலுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் அடித்து தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

வேன் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவர் பலி

தகவலறிந்து சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . மேலும் காயம்பட்ட நபர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

கோமதியாபுரம் ஒன்றாம தெருவைச் சேர்ந்த முருகன் (23), மதன்(23) ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றன இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி