ஆப்நகரம்

காட்டுப் பகுதியில் காத்துகிடக்கும் ரேஷன் அரிசி லாரிகள்: தண்ணீர் இன்றி தவிக்கும் ஓட்டுநர்கள்!

ரேஷன் அரிசிகளை இறக்கி வைக்க அனுமதி தராததால் ஓட்டுநர்கள் நாள்கணக்கில் காத்திருக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் உணவின்றி ஓட்டுநர்கள், கிளீனர்கள் தவிக்கின்றனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Jan 2023, 6:45 am
நெல்லை ரேஷன் கடைகளுக்கு ஏற்றி வந்த அரிசியை கிட்டங்கியில் இறக்கி வைப்பதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளால் மைசூரில் இருந்து வந்த லாரிகள் நாள் கணக்கில் காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. காட்டுப்பகுதி என்பதால் உணவு தண்ணீர் கிடைக்காமல் ஓட்டுநர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
Samayam Tamil ration rice lorry drivers


நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழி சாலையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முத்தூர் பகுதி. இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு பின்னர் மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி பல்வேறு ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மைசூரில் இருந்து ஐந்து லாரிகளில் பச்சரிசி மூட்டை கொண்டுவரப்பட்டது. ஐந்து லாரிகள் கொண்டு வந்த அரிசி மூட்டையோடு கிட்டங்கியின் உள்ளே அரிசியை இறக்கி வைக்க அனுமதி கிடைக்காத நிலையில் வெளியே நிறுத்தி வைத்திருந்தனர். அப்பகுதி காட்டுப்பகுதியாக இருப்பதால் ஓட்டுநர் மற்றும் கிளீனர் என பத்து பேர் கடந்த நான்கு தினங்களாக உணவு மற்றும் தண்ணீருக்கு மிகுந்த கஷ்டப்பட்டதாகவும் உணவு சாப்பிட செல்ல வேண்டுமென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று தான் உணவு சாப்பிட முடியும் என்ற நிலை உள்ளதாகவும் எனவே காலை மற்றும் இரவு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; ஓபிஎஸ் அறிவிப்பு.!
இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டால் உள்ளே இறக்கி வைக்க கிட்டங்கியில் இடமில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆனால் உள்ளூரில் இருந்து வரும் பொருட்களை மட்டும் கிடங்கில் இறக்கி வைக்க அனுமதி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்த பின்னர் வெளியே நிறுத்தி வைத்திருந்த லாரிகளை உள்ளே அனுமதித்துள்ளதாகவும் இன்னும் எத்தனை நாள் கழித்து இறக்க அனுமதி கொடுப்பார்கள் என்று தெரியவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
யாருக்கு இரட்டை இலை? பின்னால் ஓடும் அதிமுக... வரலாற்றை மாற்றிய ஈரோடு கிழக்கு!
மேலும் கிட்டங்கிக்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதிக எடையுடன் அரிசி ஏற்றி வரும் லாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி