ஆப்நகரம்

அடித்து வெளுக்கும் மழை... தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 8:27 pm
வங்கக்கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிவு இருப்பதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Samayam Tamil தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது


4 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை மாவட்டத்தின் பெரிய அணையான மணிமுத்தாறு அணை நிரம்பியதையடுத்து நேற்று முதல் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

காலை 7 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

வெள்ளம் ஓய்ந்தது... இனி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 1,760 கனஅடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,451 கன அடியாகவும் இருந்தது.

சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 141.04 அடியாக உள்ளது. இதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை... அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பொழிவு இருப்பதால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

அடுத்த செய்தி