ஆப்நகரம்

மழை, வெள்ளத்தால் நெல்லையில் அபாயகரமான சூழல்? - என்ன சொல்கிறார் அமைச்சர்!

கடும் மழை, வெள்ளம் காரணமாக நெல்லை மாவட்டத்துக்கு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 15 Jan 2021, 4:40 pm
நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம் , மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்பு படம்
நெல்லை வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்தது.

இதனையடுத்து மாநில வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிவான குழுவினர், நெல்லை கருப்பந்துறை உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பாதிப்பு நிலவரம் குறித்து நெல்லையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மழை, வெள்ளம், திருநெல்வேலியின் ட்ரோன் காட்சி...

நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தற்போது 23 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 60 ஆயிரம் கன அடி உபரிநீர் சென்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மழை, வெள்ளம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் அபாயகரமான சூழல் எதுவும் இல்லை.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேத விவரங்கள் போர்க்கால அடிப்படையில் கணக்கிடப்பட்ட விவசாயிகளுக்க உரிய இழப்பீடு வழங்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் ட்ரோன் மூலம் விவசாய நில பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

மழையால் இடிந்த வீடுகள்... 300 கோழிகள் உயிரிழப்பு

மழை, வெள்ளத்தால் குடிநீர் உரை கிணறுகள் மூழ்கியுள்ளன. மாற்று நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி