ஆப்நகரம்

தொடர் மழை... அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணை பகுதியில் தொடர் மழையை அடுத்து அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jan 2021, 9:31 pm
வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் நீடித்து வருவதை அடுத்து நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான மணிமுத்தாறு பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Samayam Tamil அகஸ்தியர் அருவி -நெல்லை
தொடர் மழை நெல்லை அகஸ்தியர் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது


பாபநாசம் அணை ஏற்கெனவே நிரம்பிய நிலையில் மீண்டும் மழையால் தண்ணீர் வரத்துஅதிகரித்ததை அடுத்து அணையில் இருந்து சுமார் 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று பாபநாசம் அணையில் 2,000 கன அடி தண்ணீர், மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய மணிமுத்தாறு அணை

இதையடுத்து தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி