ஆப்நகரம்

சொத்து ஆசை யாரை விட்டது: போதையைப் போட்டு தந்தையைக் கொன்ற மகன்கள்!

நெல்லை மாவட்டம் பணகுடியில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட சொத்து ஆசை காரணமாகப் பெற்ற தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Samayam Tamil 1 Nov 2020, 3:43 pm
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அழகிய நம்பி புறத்தைச் சேர்ந்தவர் காமராஜ். வயது 65. அண்ணா நகர் செல்லும் வழியில் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
Samayam Tamil சொத்து ஆசை யாரை விட்டது: போதையைப் போட்டு தந்தையைக் கொன்ற மகன்கள்!
சொத்து ஆசை யாரை விட்டது: போதையைப் போட்டு தந்தையைக் கொன்ற மகன்கள்!


இதில் மூத்த மகன் கென்னடி இரண்டாவது மகன் ராஜா (எ) இருதயராஜ் (34) மூன்றாவது மகள் பாப்பாத்தி நான்காவது மகன் சேகர்(28) ஆவர். பிள்ளைகள் அனைவருக்குமே திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில், காமராஜ் தனக்குச் சொந்தமான பணகுடி ஆர்எம்எஸ் கல்யாண மண்டபம் அருகே உள்ள 2 1/4 செண்டு காலி மனையை மூத்த மகன் கென்னடிக்கு உயில் எழுதி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மீதமுள்ள 2 மகன்களில் இருதயராஜ் அவ்வப்போது தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என காமராஜிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் இருதயராஜ் அவரது தம்பியான சேகரும் சேர்த்து மது அருந்தி உள்ளனர். அதன்பின் இருவரும் சேர்ந்து காமராஜிடம் சென்று சொத்தை மூத்த மகனுக்கு எதற்காக எழுதி வைத்தீர்கள் எனப் பிரச்சினை கிளப்பி சண்டை போட்டுள்ளனர்.

தடைகளை உடைத்து, கையில் தாலி எடுத்த சாமி நெல்லையப்பர்...

இந்த தகராறு முற்றி ஒரு கட்டத்தில் மகன்கள் இருவரும் தந்தை காமராஜை அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன்பின் சகோதரர்கள் இருவரும் தங்கள் மூத்த அண்ணன் வீட்டிற்குச் சென்று, தாங்கள் தந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து கொலையாளி சகோதரர்கள் மூத்த அண்ணன் கென்னடியையும் தாக்க முயன்றுள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட கென்னடி அவர்களிடமிருந்து தப்பி தெரு தெருவாக ஓடியுள்ளார். அதிர்ந்துபோன கென்னடி சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பணகுடி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய காமராஜ் மகன்களை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி