ஆப்நகரம்

நீரில் மிதக்கும் தூத்துக்குடி, படகில் சென்று மீட்கும் போலீஸ்!

தூத்துக்குடியில் கடந்த 5 நாட்களாகப் பெய்த தொடர் மழையால் முத்தம்மாள் காலணி ராம் நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சுழலல் உருவானது.

Samayam Tamil 17 Jan 2021, 11:52 pm
தூத்துக்குடி முத்தம்மாள் காலணி, ராம் நகர்ப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் தவித்த அப்பகுதி மக்களுக்குக் கடை வீதி மற்றும் இதர அலுவல்களுக்கு வெளியே சென்று வரப் படகு வசதி மற்றும் வாகன வசதி செய்து கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.
Samayam Tamil நீரில் மிதக்கும் தூத்துக்குடி, படகில் சென்று மீட்கும் போலீஸ்!
நீரில் மிதக்கும் தூத்துக்குடி, படகில் சென்று மீட்கும் போலீஸ்!


இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியே முடியாமல் பேராபத்தில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்குப் படகு வசதி செய்து கொடுத்து, அவர்கள் படகில் செல்வதையும் பார்வையிட்டார்.

நெல்லை வெள்ளம்... 63 வீடுகள் இடிந்து நாசம்

மேலும் அவர்களுக்கு உதவத் தூத்துக்குடி காவல்துறையின் பேரிடர் மீட்புப் படையினர் 10 வீரர்களையும் பணியமர்த்தியுள்ளார். அதேபோல் காவல்துறை சார்பாக அப்பகுதி மக்களுக்கு வாகனம் ஒன்றும் உதவியாக வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை, வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி