ஆப்நகரம்

இரட்டை வேடம் போடுகிறது அதிமுக : ஜி.முத்தரசன் கண்டனம்

தமிழகத்தில் இரண்டு அணி தான் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை, அமைந்தாலும் அந்த அணி வெற்றி பெறாது.

Samayam Tamil 21 Nov 2020, 1:49 pm
வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil g mutharasan


பாஜக மற்றும் அதிமுக அரசு கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் அரசு பணத்தை செலவு செய்து அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மற்றும் அமித்ஷா அரசியல் பேசுகின்றனர். ஆனால் அதே கொரோனாவை காரணங்காட்டி எதிர்க்கட்சிகளை முடக்கி வருவது கண்டிக்கத்தக்கது.

வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிவிட்டு,நடத்த அனுமதி அளிப்பது அதிமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற அடிப்படையில் அதிமுக அரசு செயல்படுகிறது . தமிழகத்தில் இரண்டு அணி தான் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை, அமைந்தாலும் அந்த அணி வெற்றி பெறாது.

மதுரை: கோயில் இடம் 50 ஏக்கரை ஆக்கிரமித்த வேளாண் கல்லூரி!

தமிழகத்தில் பாஜக தலைகீழாக நின்றாலும் காலூன்ற முடியாது என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு கோயில்களிலிருந்து காணாமல் போன சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பின்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது, சிலைகள் மீட்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், சிலையை கடத்தியவர்கள் யார், இதில் யார் காப்பாற்றப் படுகிறார்கள் இதற்கெல்லாம் முதல்வர் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி