ஆப்நகரம்

எரிவாயு மையத்தில் வாயுக்கசிவு... சிறப்பாக செயல்பட்ட தீயணைப்புத்துறை

அதிர்ஷ்டவசமாக தீவிபத்து எதுவும் ஏற்படாமல் கசிவு அடைக்கப்பட்டதால் பெரும் இழப்பு தடுக்கப்பட்டது.

Samayam Tamil 13 Dec 2020, 8:54 am
நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் உடையார்பட்டி விலக்கு பகுதியில் கார் உள்ளிட்ட எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும், ‘ஆட்டோ கியாஸ் பங்க்’செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil தீயணைப்புத்துறையினர்


இங்கு இன்று பிற்பகலில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பிக்கொண்டிருந்த போது திடீரென்று கசிவு ஏற்பட்டது. இதைக்கண்ட ஊழியர்கள் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீ பற்றிக் (flame) கொள்ளாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இதற்கிடையே அங்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். கியாஸ் கசிவை தடுத்து நிறுத்தினார்கள். அந்த கியாஸ் பங்கில் 13 டன் எடை கொண்ட கியாஸ் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக தீவிபத்து எதுவும் ஏற்படாமல் கசிவு அடைக்கப்பட்டதால் பெரும் இழப்பு தடுக்கப்பட்டது.

ராஜா செல்லையா: ரஜினியைக் கொண்டாடி இவரை விட்டுட்டோமே!!!

இந்த சம்பவத்தையட்டி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு என்ஜினீயர்கள் அங்கு வந்து ஆய்வு செய்தார்கள். கசிவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி