ஆப்நகரம்

கிணற்றில் விழுந்த மாணவி... கயிற்றில் தொங்கிய உரிமையாளர் பத்திரமாக மீட்பு

கிணற்றில் 15 அடி அளவில் தண்ணிர் இருந்த நிலையில் மேலே ஏறுவதற்கான வசதி இல்லாத நிலையில் சத்தமிட்டப்படி தத்தளித்து வந்துள்ளார்.

Samayam Tamil 8 Nov 2020, 9:26 pm
தென்காசி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மாணவியை நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு தென்காசி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Samayam Tamil கயிற்றில் தொங்கும் மாணவி


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகர்புரம் பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. சுற்றுவட்டார விவசாய நிலங்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எதிர்பாரத விதமாக 100 அடி ஆளமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 15 அடி அளவில் தண்ணிர் இருந்த நிலையில் மேலே ஏறுவதற்கான வசதி இல்லாத நிலையில் சத்தமிட்டப்படி தத்தளித்து வந்துள்ளார்.

இரு நாள்களுக்கு சுழற்றி அடிக்கப்போகும் மழை: லிஸ்டை பாருங்க!


அலறல் சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் உடனே கிணற்றில் தத்தளித்த மாணவியை கைப்பற்றி கிணற்றின் பிடிமானத்தை பிடித்தப்படி நின்றுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தென்காசி தீயணைப்பு துறையினர்க்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

அடுத்த செய்தி