ஆப்நகரம்

கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை... பின்னணி என்ன?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Apr 2022, 1:56 pm

ஹைலைட்ஸ்:

  • கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலை
  • சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண
  • அப்பகுதியில் பெரும் சோகம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரத்தில் கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரத்தைச் சேர்ந்தவர் மேனகா (34). இவருக்கும் கடையநல்லூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (38) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.


கடந்த மூன்று மாதங்களாக இருவரும் சேர்ந்தமரத்தில் மேனாக அண்ணன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை இருவரும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த ஆட்சியில் லஞ்சம் 2000... இந்த ஆட்சியில் 15000; வைரலாகும் அரசு அதிகாரியின் ஆடியோ!

கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி