ஆப்நகரம்

திருநெல்வேலி: 5ஆவது முறையும் அபார்ஷன்... தூக்கில் தொங்கிய தம்பதி

குழந்தை இல்லாத ஏக்கத்தில் 5ஆவது முறையும் கருக்கலைப்பு கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 11:05 am
குழந்தை இல்லாத ஏக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த கணவன் மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil தற்கொலை


திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மூன்று முறை வடிவு கருவுற்று கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4ஆவது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக வடிவு கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர். குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . உடனடியாக தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி