ஆப்நகரம்

தென்காசி நகரை எப்படி அழகுப்படுத்துவது: முக்கிய ஆலோசனை!

தென்காசி நகரை அழகுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

Samayam Tamil 10 Aug 2020, 7:50 pm
தென்காசி நகரை அழகுபடுத்தும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கும் வகையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வியாபரிகளுடான ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
Samayam Tamil ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்


தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது, மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை கட்டுபடுத்தும் வகையில் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ஹசீனா பேகம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர்கள், அரசியல் கட்சியினர், சமூகநல அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தென்காசி நகரை அழகுபடுத்துவது, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், தென்காசி நகரில் மரங்களில் ஆடி அடித்து விளம்பர பலகைகள் வைப்பது, பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்... பொதுமக்கள் கலக்கம்

அத்துடன், தென்காசி கொடிமரத் திடல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில் பேனர்கள் வைக்க இடம் ஒதுக்கப்படும். அந்த இடங்களில் மட்டும் பேனர்கள் வைக்கலாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு வணிகர்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூட்டத்தின் போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

அடுத்த செய்தி