ஆப்நகரம்

பாஜகவை கம்சன் என்று சொன்ன கே.எஸ்.அழகிரி... ஏன்?

இரண்டு பெண்களை அனுப்பியதை போல, பாஜக இரண்டு பெண்களை புதுச்சேரி மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது.

Samayam Tamil 21 Feb 2021, 9:03 am

ஹைலைட்ஸ்:

  • கரூர் எம்.பி. ஜோதிமணி காவல்துறையினரால கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக அவலம்
  • கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட 2 பெண்கள் போல புதுவை ஆளுநர்கள் அனுப்பப்பட்டனர்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil k s alagiri
சட்டமன்ற தேர்தல் மற்றும் ராகுல் காந்தி வருகை ஆகியவை தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் , ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு நெல்லை மாவட்டத்திற்கு வருவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கி பேசினார் .
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

சுதந்திர இந்தியவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வை மறைக்க உன்மைக்கு மாறான தகவல்களை பிரதமர் தெரிவிக்கிறார். கச்சா எண்ணெய் விலையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வாக உள்ளது. பெட்ரோல் விலை குறைக்க மன்மோகன் சிங்குடன் பிரதமர் ஆலோசனை செய்யலாம். தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பெட்ரோல் போட முடியாத நிலை உள்ளது. நாட்டின் பொருளாதார நிலை தலைகீழாக மாறும் சூழல் உள்ளது. தேசம் மையபுள்ளியில் இருந்து விலகி செல்கிறது.

மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் வேலுமணி... இதுதான் காரணமா?

கரூர் எம்.பி.ஜோதிமணி காவல் துறையால் தாக்கப்பட்டுள்ளார். கை, காலை பிடித்து ஜோதிமணியை போலீசார் தூக்கி எரிந்துள்ளனர். நகராட்சி ஆணையரிடம் காந்தி சிலை அகற்றம் குறித்த கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கைது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். காந்தி சிலை அகற்றம் , காமராஜர் பெயர் நீக்கம் போன்றவை தற்போது நடப்பது அதிமுகவின் ஜனநாயக அற்ற நிலையை காட்டுகிறது. வரும் 27,28, 1 ஆகிய தினங்களில் ராகுல்காந்தி தூத்துக்குடி, நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழசை சவுந்திரராஜன் புதுவை ஆளுநராக நியமிக்கப்பட்டது ஆட்சியை அகற்றுவதற்காகதான். கிருஷ்ணனை கொலை செய்வதற்கு கம்சன் இரண்டு பெண்களை அனுப்பியதை போல, பாஜக இரண்டு பெண்களை புதுச்சேரி மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது. ஆனால் நாரயணசாமி பிழைத்துக் கொள்வார். திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி நன்றாகவும் சிறப்பாகவும் உள்ளது. என தெரிவித்தார் .

அடுத்த செய்தி