ஆப்நகரம்

நெல்லை வக்கீல் மாணவி ஆபாசப் படம்: பேராசிரியர் செய்த கொடுமை!

நெல்லை சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பேராசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

Samayam Tamil 14 May 2021, 5:28 pm
நெல்லை பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
Samayam Tamil நெல்லை வக்கீல் மாணவி ஆபாசப் படம்: பேராசிரியர் செய்த கொடுமை!


அந்த மனுவில், “பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியில் வசிக்கும் சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி. ஆன்லைனில் படம் எடுக்கும்போது எனது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தார்.

அப்போது ஒருநாள் நான் ஊருக்குச் செல்வதை அறிந்த உதவி பேராசிரியர் தனது காரில் சென்றுவிடுவதாக அழைத்து நடுவழியில் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு அடிக்கடி பாலியல் உறவு செய்ய வற்புறுத்தினார்” எனக் கூறப்பட்டிருந்தது.

அட நம்ம திருநெல்வேலி போலீஸா இப்படியெல்லாம் செய்றாங்க? -நம்ப முடியலையே!

இதனிடையே மாணவி மாநகர காவல்துறை ஆணையாளர் அன்புவிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் தனது பிறந்தநாளின் போது சட்டக் கல்லூரி வாசலில் அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி அந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பியவர்.

இப்போது பேராசிரியர் மீது காவல்துறையினர் பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் விஷய மறிந்து பேராசிரியர் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி