ஆப்நகரம்

ஆற்றில் மூழ்கிய வழக்கறிஞர்... இரண்டாவது நாளாக உடல் தேடும் பணி தீவிரம்

மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில் இரவு நேரமானதால் தேட முடியாமல் திரும்பினர்.

Samayam Tamil 2 Jan 2021, 10:01 am
அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற வழக்கறிஞர் நீரில் மூழ்கி பலி ஒரு நாள் முழுவதும் தேடி உடல் கிடைக்காத உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Samayam Tamil அம்பாசமுத்திரம்


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சந்தைமடம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் மகன், ரூபன் (25). வழக்கறிஞராகப் பயிற்சி செய்து வரும் இவர் புதன்கிழமை மாலை நண்பர்களுடன் ஆலடியூர் அருகே தாமிரவருணி, நரியணைப் பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்றதில் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில் இரவு நேரமானதால் தேட முடியாமல் திரும்பினர்.

புத்தாண்டு கொண்டாடச் சென்றவர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

மீண்டும் நேற்று காலை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை நாள் முழுவதும் தேடியும் ரூபன் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று தேடும் பணியைத் தொடர்வதாக தீயணைப்பு படை அதிகாரி தெரிவித்தார். மேலும் இது குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி