ஆப்நகரம்

நெல்லை பிரம்மா விவகாரம்... வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு

2ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் , வழக்கறிஞர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.

Samayam Tamil 27 Oct 2020, 9:21 pm
நெல்லை வழக்கறிஞர் பிரம்மா தாக்கப்பட்ட வழக்கில், அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் , வழக்கறிஞர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.
Samayam Tamil வழக்கறிஞர் போராட்டம்


நெல்லை முருகன்குறிச்சியில் உள்ள மதுரம் உணவகத்தில் வழக்கறிஞர் பிரம்மா சாப்பிடச் சென்றபோது பணியாளர்களுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் பிரம்மா தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் ஹரிகரன் மணிசங்கர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக அந்த கடையில் பணியாற்றிய பொன்னரசு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் பிரம்மா மீது வன்கொடுமை வழக்கு பதிவு பட்டுள்ளது.இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து வழக்கறிஞர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

TASMAC: கோவையில் மது விற்பனை நிறுத்தம்.. ஏன் தெரியுமா?

தலைவர் சிவ சூரியநாராயணன் தலைமையில் நடைபெற்றது.இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவ சூரியநாராயணன் வழக்கறிஞர் பிரம்மா மீது பொய்யான வழக்கு கொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கபடும் என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரம்மா மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2ஆம் தேதி மாநக காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி