ஆப்நகரம்

மனு வாங்க கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை... வக்கீல்கள் ஆத்திரம்!

வழக்கறிஞர் பிரம்மா ஓட்டலில் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவர் மீது பொய்யாக போடப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 29 Oct 2020, 4:23 pm
நெல்லை பாளையங்கோட்டையில் கடந்த 23 ஆம் தேதி ஓட்டலுக்கு உணவருந்த சென்ற வழக்கறிஞர் பிரம்மா , ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் தாக்கப்பட்டார் . இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil வழக்கறிஞர்கள் தர்ணா
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா


இந்த நிலையில் , ஓட்டல் ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரம்மா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது; சட்டத்தை காவல் துறையினர் தவறாக பயன்படுத்தியுள்ளனர் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கறிஞர் சங்கத்தினர் மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மனு அளித்தனர்.

ஆனால் அந்த மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தனர் . ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் ஊழியரிடம் லோக்கல் ரவுடி அடாவடி...கண்டுகொள்ளாத காவல் துறை!

அப்போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் . இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர் . இதனையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்து சென்றனர்.

அடுத்த செய்தி