ஆப்நகரம்

பிரேக் அப் செய்த பெண்: போட்டோக்களை வைத்து இளைஞர் பிளாக் மெயில்!

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக காதலை கைவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம். நம்பிக்கை துரோகம் செய்த முன்னாள் காதலனின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 27 Oct 2020, 12:32 pm
காதலித்த பெண், வீட்டுச் சூழ்நிலை காரணமாகக் காதலைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ளாத இளைஞர், தனது காதலியுடன் தனிமையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil பிரேக் அப் செய்த பெண்: போட்டோகளை வைத்து இளைஞர் பிளேக் மெயில்!
பிரேக் அப் செய்த பெண்: போட்டோகளை வைத்து இளைஞர் பிளேக் மெயில்!


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இந்த தவறான செயல் குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை களக்காடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் மகன் மதன் ராஜ். வயது 26.

மதன் ராஜும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்குத் திட்டமிட்ட இந்த காதல் ஜோடி, தங்கள் விருப்பம் குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மதன் ராஜ் காதலைப் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதையடுத்து வேறு வழி இல்லாமல் தவித்து வந்த இளம்பெண், தான் காதலித்து வந்த மதன்ராஜ்ஜிடம் பேசுவதை நிறுத்தி விட்டார் எனக் கூறப்படுகிறது.

கோவை: மகனை கடத்த அடியாட்களுடன் வந்த மனைவி..!

இதன் காரணமாக கடும் சோகத்திற்கு ஆளான மதன் ராஜ், தானும் தனது காதலியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்துபோன பெண் வீட்டார், சம்பவம் குறித்து களக்காடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பெண் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள களக்காடு போலீசார், மதன் ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி