ஆப்நகரம்

Sankarankovil Murder: ஊர் தகராறில் போட்டுத் தள்ளப்பட்ட நாட்டாமை

சங்கரன்கோவில் அருகே வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

Samayam Tamil 18 Jan 2021, 4:32 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த வள்ளிநாயகம்(52). இவர் ஊர் நாட்டாமையாக உள்ளார். இந்நிலையில் ஊரில் உள்ள சிலர் இருதரப்பாக பிரிந்து பொங்கல் தினத்தன்று வாருகாலில் தண்ணீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.
Samayam Tamil ஊர் நாட்டாமை படுகொலை
சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாமை படுகொலை


இந்த மோதலில் ஒரு பெண்ணிற்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீசார் ஊரில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஊர்நாட்டாமையிடம் விசாரித்துள்ளனர். அவர் யார், யார் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் என பெயர் விபரங்களை காவல்துறையினரிடம் தந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் நேற்றிரவு குன்னக்குடி என்ற ஊர் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

நாகர்கோவில் டூ சென்னை... ரயிலில் பயங்கர தீ விபத்து

இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து நாட்டாமையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செந்தட்டியாபுரம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நாட்டாமையை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி