ஆப்நகரம்

சபதத்தை முடிக்கும் மேயர்; திருப்தியில் திமுக மேலிடம்!

மேயர் எடுத்த சபதத்தை முடிக்க இருப்பது திமுக மேலிடத்துக்கு திருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 6:44 pm
நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Samayam Tamil நெல்லை மேயர் சரவணன்
நெல்லை மேயர் சரவணன்


திருக்குறள் வாசித்து கூட்டம் தொடங்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பி.எம்.சரவணன் பேசியதாவது:

மக்களை தேடி மேயர் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்கள் குறைகளை நேரில் அறிந்து தீர்க்கப்படும். பிறப்பு , இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உடனடியாக வழங்கப்படும்.


மேலும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டு 5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இதன் மூலம் 4 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும். அதுபோன்று மாநகராட்சி சார்பில் சொந்தமாக பெட்ரோல் பங்கும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி வளாகத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை அமைக்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடி தண்ணீர் பிரச்சனை, தெருவிளக்கு, சாலை வசதிகள், வாருகால் பிரச்சனை குறித்து பேசினர். இதன் பின்னர் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

முரட்டுத்தனமான முதல் இரவு; விடிந்ததும் மாப்பிள்ளை கைது!

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

நெல்லை மேயராக பி.எம். சரவணன் பதவி ஏற்றது முதல் மாநகராட்சி அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பமாக இருந்தது. ஏறக்குறைய சபதம் எனு கூட சொல்லலாம்.

இந்நிலையில் தனது சபதத்தை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம் போட்டு வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்.

இந்த செயல் திமுக மேலிடம் மட்டும் அல்லாமல் கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு திமுக நிர்வாகிகள் கூறினர்.

அடுத்த செய்தி