ஆப்நகரம்

நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழ் இருக்கும்- அஞ்சலி செலுத்தியபின் வைகோ புகழாரம்!

நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழ் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டி அளித்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 Aug 2022, 4:36 pm

ஹைலைட்ஸ்:

  • பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல் நல குறைவால் மறைவு
  • நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக வைகோ
  • நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணன் இருப்பார் என புகழாரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ
நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ
இலக்கியவாதி நெல்லை கண்ணன் உடல்நல குறைவால் காலமானதை தொடர்ந்து அவரது உடல் நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆன வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய நிகழ்ச்சியாக இருந்தாலும், பட்டிமன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார்.

இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவருதி விட்டுச் சென்றதாகவும் என்னிடம் தெரிவித்தார். காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாக கொண்டு செயல்பட்டவர். அவரது இழப்பு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்று விட்டாலும் நெல்லை மாவட்ட மக்களின் மனநிலையில் அவர் ஒருபோதும் மறைவதில்லை.

நிதியமைச்சர் பி.டி.ஆரால் இதை நிரூபிக்க முடியுமா? சவால் விட்ட சீமான்!

இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பெரிய இழப்பாக உள்ளது. நெல்லை கண்ணன் மறைவு நெல்லைக்கு இழப்பு, இலக்கிய உலகிற்கு இழப்பு. நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணன் புகழ் நீடித்திருக்கும் என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி