ஆப்நகரம்

எங்களையும் ஊருக்கு அனுப்புங்க... ஆட்சியரிடம் படையெடுத்த பிறமாநிலத் தொழிலாளர்கள்

தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வர தொடங்கினர்.

Samayam Tamil 15 May 2020, 4:07 pm
நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 50 பேர் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக திடீரென ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil நெல்லை ஆட்சியர் அலுவலகம்


தெற்கு புறவழிச்சாலை அருகிலுள்ள அண்ணாசாலையில் பாளையங்கோட்டை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக வடமாநிலத்தில் இருந்து பணிக்கு வந்த பலர் வேலையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3000 பேர் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ‘சர்மிக் சிறப்பு ரயில்’ மூலம் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரீட்சையை தள்ளி வைங்க முதல்வரே: பத்தாம் வகுப்பு மாணவர் கடிதம்!

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கட்டிட தொழில் செய்யும் வடமாநிலத்தவர்கள் தங்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பவேண்டும் என கோரிக்கை வைத்து இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், நெல்லை பெருமாள்புரத்தில் கட்டிட பணிக்காக வந்து தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தாங்கள் தங்கியுள்ள பகுதியில் இருந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வர தொடங்கினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி சொந்த ஊர்களுக்கு விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனாலும், அதனை ஏற்க மறுத்து கலைந்து செல்லாமல் இருந்ததையடுத்து, அவர்கள் சார்பில் இருவரை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்லபபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி