ஆப்நகரம்

புரேவி புயலின் தற்போதைய வேகம்... அமைச்சரின் முக்கிய தகவல்!

புயலின் வேகம் 10 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோ மீட்டராக தற்போது வேகமெடுத்து நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Dec 2020, 8:02 pm
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக நெல்லை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil அமைச்சர் உதயகுமார்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார்


இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புயல் தொடர்பாக மாவட்டத்தில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியது:

நெல்லை அணைகளின் இருப்பு நீர்மட்டம் என்னென்ன?

புரெவி புயல் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை அதிக னமழை பெய்யும். நெல்லை ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 490 நிவாரன மையங்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் தமிழகத்தின் புயல் பாதிக்கப்பட கூடும் என கண்டறியபட்ட இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளது.தமிழகத்தில் முதல் கள மீட்பாளர்களாக பேரிடர் பயிற்சி பெற்றவர்கள் 43,409 நபர்கள் உள்ளனர்.

புயல் பாதிக்கப்பட கூடியதாக கணிக்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தாழ்வான இடங்கள், ஓட்டு வீடு, பாதுகாப்பில்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண மையங்களுக்கு வர வேண்டும்.

வேளாண் மசோதா: கலப்பையுடன் காங்கிரஸார் போராட்டம்

நிவாரண மையங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளை மக்கள் சென்று பார்ப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கண்காணித்து வருகிறது.

பேரிடர் காலத்தில் சமூக வலைதளங்களில் பரப்பும் கருத்துக்களை நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பேரிடர் மேலான்மை துறை வெளியிடும் தகவல்களை மட்டுமே உறுதியானது.

பாம்பன் அருகே 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது வேகமெடுத்து, 13 கிமீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி