ஆப்நகரம்

ஓய்வு பெற்றவர்கள் அரசியல் ஒப்பாரி... ரஜினி, கமலை சாடிய அமைச்சர்

எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் எங்களது பிரச்சாரம் அமையும். ஓய்வு பெற்றவர்கள் தற்போது அரசியலுக்கு வந்து ஒப்பாரி வைக்கின்றனர்

Samayam Tamil 19 Dec 2020, 9:48 am
நான்கு ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை அதிமுக அரசு சந்தித்துள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil r b udayakaumar


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது அதிமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கட்சி முழுவீச்சில் செயல்பட்டு ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கிப் பேசினார் .

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் அது தொடர்பாக பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வியூகத்தை அமைக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் எங்களது பிரச்சாரம் அமையும் ஓய்வு பெற்றவர்கள் தற்போது அரசியலுக்கு வந்து ஒப்பாரி வைக்கின்றனர் - கமலஹாசன், ரஜினி ஆகியோரை மறைமுகமாக சாடிய அமைச்சர், புயல் மழை வறட்சி எந்த சூழ்நிலையிலும் பங்களிப்பு செய்யாமல் தற்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்கள் கடமை ஆற்றி கொண்டு இருக்கும் எங்கள் மீது சேற்றை வாரி அடிக்கின்றனர்” என்றும் தெரிவித்தார்.

ரஜினி, கமல் கூட்டணியை ரசிகர்கள் விரும்பலாம்... மக்கள்???

கமலஹாசன் போன்றவர்கள் புதிதாக வந்து என்ன திட்டங்களை மக்களுக்கு கொடுக்கப்போகிறார்கள், அவர்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் தொகுதியான நாங்குநேரி தொகுதியை எப்படி அதிமுக வெற்றி பெற்றதோ அதே போன்று நெல்லை, பாளையங்கோட்டை தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் எம்.ஜி.ஆரின் சொந்த வீடு அதிமுக, புதிதாக வீடு கட்டியவர்கள் அந்த உரிமையை எடுக்க முடியாது. அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகிறது, வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் அவர்களின் பாச்சா பலிக்காது . எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகபடுத்த தேவையில்லை, புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் நடைபெற்று பணிகள் துவங்கும் - என்று தெரிவித்தார் பேட்டியின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி