நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தன் குளத்தை அழகுபடுத்தும் பணியைும் அவர் தொடக்கி வைத்தார்.
மேலும் தாமிரபரணி நதிக்கரைகளை சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தல், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது என்று பல்வேறு பணிகளை அவர் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியது:
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போ? -அமைச்சர் சொன்ன அசத்தல் அப்டேட்!
நெல்லை மாவட்டத்தில் நடந்துவரும் நீர்நிலைகள் பராமரித்தல் பணிகள், மரம் நடும் பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டேன் இங்குள்ள ஆயிரத்து 237 நீர்நிலைகளை 'நெல்லை நீர் வளம்' என்ற இணையதளம் மூலம் ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப வடிவிலான பணிகள் நடைபெற்றுள்ளன.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் தாமிரபரணி நதிக்கரைகளை சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தல், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது என்று பல்வேறு பணிகளை அவர் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியது:
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போ? -அமைச்சர் சொன்ன அசத்தல் அப்டேட்!
நெல்லை மாவட்டத்தில் நடந்துவரும் நீர்நிலைகள் பராமரித்தல் பணிகள், மரம் நடும் பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டேன் இங்குள்ள ஆயிரத்து 237 நீர்நிலைகளை 'நெல்லை நீர் வளம்' என்ற இணையதளம் மூலம் ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப வடிவிலான பணிகள் நடைபெற்றுள்ளன.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.