ஆப்நகரம்

பிரேசில் வேலை ரூ. 2 லட்சம்: 450 பேர் ஏமாற்றம், நெல்லையில் இளைஞர்கள் கதறல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Samayam Tamil 19 Apr 2021, 7:27 pm
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் பிரேசில் நாட்டிற்கு வேலைக்குச் செல்ல ஆட்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ. 2 லட்சம் வீதம் சுரேஷ் குமாரிடம் கொடுத்துள்ளனர்.
Samayam Tamil பிரேசில் வேலை ரூ. 2 லட்சம்: 450 பேர் ஏமாற்றம், நெல்லையில் இளைஞர்கள் கதறல்!


இப்படி நூற்றுக்கணக்கானோர் பணம் கொடுத்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனினும் சுரேஷ் குமார் வேலை வாங்கித் தராமல் இளைஞர்கள் பலரை ஏமாற்றி வருகிறார்.

இதில் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் பலமுறை காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நெஞ்சு வலி என நீதிபதியை ஏமாற்றித் தப்பி ஓடிய நெல்லை கைதி!

இந்த சூழலில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து கோரிக்கை மனு ஒன்ற அளித்தனர். அந்த மனுவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 450க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி