ஆப்நகரம்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் மாமியார் நெல்லையில் காலமானார்; ஓபிஎஸ் நேரில் அஞ்சலி!

அதிமுக பாராளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்தின் மாமியார் இன்று நெல்லையில் காலமானார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Sep 2022, 2:38 pm

ஹைலைட்ஸ்:

  • ஓபிஎஸ் மகனின் மாமியார் நெல்லையில் காலமானார்‌
  • ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் இருவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்
  • ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மூக்கம்மாள் உடலுக்கு அஞ்சலி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஓபிஎஸ் நேரில் அஞ்சலி
அதிமுக பாராளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத்தின் மாமியார் மூக்கம்மாள் நெல்லை சாந்தி நகர் 27வது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த மூக்கம்மாளின் கணவர் கந்தசாமி பாண்டியன் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஆவார். இந்த நிலையில் மறைந்த மூக்கம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவிந்திரநாத் எம்பி இருவரும் இன்று நெல்லை வந்தனர். அவர்கள் நேராக சாந்திநகர் இல்லத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மூக்கம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பிரபல தொழிலதிபர் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் நிலம் அபகரிப்பு; தென்காசி சார்பதிவாளர் உட்பட 4 பேர் கைது!

தொடர்ந்து அங்கிருந்த உறவினர்களிடம் இருவரும் விசாரித்தனர். மேலும் நெல்லையைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மூக்கம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி