ஆப்நகரம்

நெல்லை சூப்பர்மார்க்கெட்டுக்கு சீல்... ரகசிய புகாரால் மாநகராட்சி நடவடிக்கை...

நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர்மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Samayam Tamil 25 Apr 2020, 1:29 pm
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல சூப்பர் மார்க்கெட் உள்ளது.
Samayam Tamil நெல்லை சூப்பர்மார்க்கெட்டுக்கு சீல்


இந்த சூப்பர் மார்க்கெட், தடை உத்தரவின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் , வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிச் செல்வதாவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டதில், சூப்பர் மார்க்கெட் செயல்படுவது தெரியவந்து. பின்னர் சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை எச்சரித்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.

பரமக்குடியில் மேலும் இருவருக்கு கொரோனா!

மாநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி