ஆப்நகரம்

சீமானின் உருவப்படத்தை கொளுத்திய காங்கிரஸ் தொண்டர்கள்: நெல்லையில் பரபரப்பு!

ராஜீவ் காந்தி குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அணியினர் சீமானின் உருவப்படத்தை தீவைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 28 May 2022, 9:16 pm

ஹைலைட்ஸ்:

  • சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
  • உருவப்படத்தை கொளுத்தியதால் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கண்டன ஆர்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலையான சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளி ராஜீவ் காந்தியென விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேடிசி நகரில் கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் போத்திராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரஷ்யாவிலிருந்து வந்து சேர்ந்தது யுரேனியம்!
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் சீமானின் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்து தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் வழக்கறிஞர் காமராஜ் வள்ளியூர் யூனியன் துணைத் தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், பணகுடி நகர தலைவர் எட்வின், சிங்கராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி