ஆப்நகரம்

நெல்லையில் பேனா நினைவு சின்னம் - மெரினாவுக்கு டஃப் கொடுக்கும் புதிய அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை ஒட்டி நெல்லை மாநகராட்சி சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 29 Apr 2023, 11:26 am
நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி துணை மேயர் ராஜு மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil pen monument
pen monument


தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை மேயர் சரவணன் வாசித்தார். அப்போது இந்திய ராணுவத்தில் பணி செய்து உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சர்க்கு நன்றி தெரிவித்தும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்களை கட்டிட கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ததற்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக குஷி.. மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் வைக்க மத்திய அரசு அனுமதி.. இத்தனை கண்டிஷன்களா..?
நெல்லையிலும் பேனா நினைவு சின்னம்

இதனை தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் தமிழினத்தின் எழுச்சிக்காக நடத்திய மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனுபவித்த கொடுமைகள் ஏராளம் என மேயர் சரவணனன் கூறினார்.

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என திராவிட தத்துவத்தை நிலை நாட்டிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நீதிக்காக போராடிய அவரது பேனாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நெல்லை வர்த்தக மைய வளாகத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதிக்காக காத்திருத்திருந்தனர். இந்நிலையில், இன்று 15 நிபந்தனைகளுடன் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி