ஆப்நகரம்

அம்பாசமுத்திரம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நெல்லை மாவட்ட ஆட்சியர்!

அம்பாசமுத்திரம் அருகே நலத்திட்ட உதவிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 Feb 2023, 7:35 pm
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூலச்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ. 7 இலட்சத்து 36 ஆயிரத்து 945 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.
Samayam Tamil nellai collector


மேலும் 7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ள மணிமுத்தாறு பூங்காவையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மூலச்சி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு: சத்தமில்லாமல் உயரும் நாம் தமிழர் வாக்கு வங்கி! சீமான் பலே பிளான்!

இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டர்.

பின்னர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் 71 பயனாளிகளுக்கு ரூ. 7 இலட்சத்து 36 ஆயிரத்து 945 மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

ஈரோடு கிழக்கு: எடப்பாடியின் தாமரை இலை தண்ணீர் டீலிங் - கடைசி நேரத்தில் ஓட்டையை அடைக்க முயற்சி!

தொடர்ந்து மணிமுத்தாறு பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 7 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள உள்ள மணிமுத்தாறு அணைப்பகுதி பூங்காவையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி