ஆப்நகரம்

ரேஷன் கார்டு... சபாநாயகர் அப்பாவு சொன்ன நற்செய்தி!

கொரோனா நிவாரண தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, நெல்லை பணகுடியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு தொடக்கி வைத்தார்.

Samayam Tamil 15 May 2021, 1:41 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா நிவாரணி நிதி வழங்கும் பணி தொடக்கம்.
  • நெல்லை ராதாபுரத்தில் எம்எல்ஏ அப்பாவு தொடக்கி வைத்தார்.
  • தொகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க விரைந்து நடவடிக்கை என்று அவர் உறுதி.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு
ராதாபுரம் தொகுதியில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பணகுடி நியாய விலைக் கடையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற சபாநாயகருமான மு.அப்பாவு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ' ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அப்பாவு உறுதியளித்தார்.

அட நம்ம திருநெல்வேலி போலீஸா இப்படியெல்லாம் செய்றாங்க? -நம்ப முடியலையே!

இந்த நிகழ்ச்சியில் நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி