ஆப்நகரம்

கொரோனா நோயாளிகளைப் பசியை தீர்த்த நெல்லையப்பர் கடவுள்!

நெல்லை மாவட்ட திருக்கோயில்கள் சார்பாக அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் அன்னதானக் கூடத்தில் தயார் செய்யப்பட்ட 500 உணவு பொட்டலங்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

Samayam Tamil 13 May 2021, 5:53 pm
தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாகக் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா நோயாளிகளைப் பசியை ஆற்றிய நெல்லையப்பர் அன்னதானம்!


அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மாநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக உள்ள உறவினர்களுக்கு உதவிடும் வகையில் உணவு பொட்டலங்கள் வழங்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

மக்களுக்கு ஸ்டெர்லைட் கொடுத்த 5டன் மூச்சு காற்று: நெல்லைக்கு விநியோகம்!

அதன்படி நெல்லை மாவட்ட இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக நெல்லையப்பர் திருக்கோவில் அன்னதானக் கூடத்தில் தயார் செய்யப்பட்ட 500 உணவு பொட்டலங்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு இணைஆனையர் சி. செல்வராஜ் தலைமையில் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி