ஆப்நகரம்

நெல்லையப்பர் - காந்திமதி திருக்கல்யாணம்... பக்தர்களுக்கு நோ எண்ட்ரி

விழாவின் நிகழ்ச்சிகளை திருக்கோயிலின் அதிகாரப்ப்பூர்வ youtube தளமான kanthimathi nellaiappar ல் தினமும் நேரலையில் காணலாம்.

Samayam Tamil 31 Oct 2020, 12:36 pm
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அம்பிகைத் தலமான, அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
Samayam Tamil nellaiyappar gandhimathi


திருநெல்வேலியில் அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமைவாய்ந்தது. சிறப்புவாய்நத இத் திருக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது.

திருவிழாவை முன்னிட்டு கொடிமரம் அருகே தங்க சப்பரத்தில் (பல்லக்கு) காந்திமதி அம்பாள் ஏழுந்தருளினாா். பின்னர் கொடிப்பட்டம் கோவில் உள் உலா நிறைவடைந்ததும், அம்பாள் சன்னதியின் கொடிமரத்தில் இன்ற அதிகாலை 4.30 -5.30க்குள் கொடியேற்றப்பட்டடது. இதைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். அதேபோல இன்று மாலையிலிருந்து, தினமும் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற உள்ள சுவாமி,அம்பாள் புறப்பாடு ஆகியவை நடைபெறுகின்றது.

வருகின்ற 10.11.2020.செவ்வாய்க்கிழமை பகல் 12.மணி அளவில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்தருளல் விழாவும் 11.11.2020. வியாழக்கிழமை கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாணத் திருவிழாவும்,அதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறும் . நிகழ்ச்சிகளை இத்திருக்கோயிலின் அலுவல்சார் youtube தளமான kanthimathi nellaiappar ல் தினமும் நேரலையில் காணலாம். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகிறார்கள்

அடுத்த செய்தி