ஆப்நகரம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்... பொதுமக்கள் கலக்கம்

கடையநல்லூர் அருகே கல்லாற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 8 Aug 2020, 12:38 am
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகராட்சி சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியாறு முதல் கல்லாறு வரை தார் சாலை போடப்பட்டது.
Samayam Tamil bridge


பெரும்பாலும் விவசாய நிலங்கள், தோட்டங்கள் உள்ள பகுதி என்பதால் விவசாயிகள் நலனுக்காகவே இந்த சாலை போடப்பட்டது இதில் கல்லாறு செல்லும் வழியில் சிற்றாறு உள்ளது. சிற்றாறை கடப்பதற்காக சமீபத்தில் சிறிய அளவில் பாலம் கட்டப்பட்டது.

தற்போது பெய்த மழையில் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிதாக கட்டப்பட்டுள்ள சிற்றாறு பாலம் தற்போது பெய்த மழையில் காட்டாற்று வெள்ளத்தில் உடைபட்டது. இதனை உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஃபோன் இருக்கு நெட் இல்லை, அழகிய மாஞ்சோலையில் அல்லோல்படும் மாணவர்கள்..!

விவசாயிகளின் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பிறகு, ஆற்றை கடக்க கட்டப்பட்ட பாலம், கட்டப்பட்ட சில மாதங்களிலேயே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி