ஆப்நகரம்

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி... என்ன செய்ய வேண்டும் மின்வாரியம்?

முறையான பரிசோதனைகளை மின்வாரியம் செய்தாலே இந்த உயிர்பலிகளைத் தடுக்க முடியும்

Samayam Tamil 8 Dec 2020, 9:36 am
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேபிள் டிவி வயரில் மின்சாரம் தாக்கி 65 வயது மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மின்வாரியம்


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமம் இந்திரா காலனியை சார்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி ஈஸ்வரி. சுமார் 65 வயதுடைய இந்த மூதாட்டி, வீட்டின் அருகே உள்ள பூந்தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருக்கும் போது பூச்செடிகளின் மீது தாழ்ந்து கிடந்த கேபிள் வயரை அப்புறப்படுத்த அருகே சென்றுள்ளார்.

தூக்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்வாரியம் தனியார்மயமா? - அமைச்சர் சொல்வது இதுதான்!

இந்நிலையில், “மழைக் காலத்தில் மின்சாரத்தில் ஏற்படும் பலிகள் வழக்கத்தை விட அதிகமாக இருப்பது ஆண்டுதோறும் தவிர்க்க முடியாத ஒன்றைப் போலக் காட்சியளிக்கிறது. முறையான பரிசோதனைகளை மின்வாரியம் செய்தால் பலிகளைத் தடுக்க முடியும் என்பதே இந்த சூழலில் நாம் முன்வைக்கும் ஒரே கோரிக்கையாக இருக்கிறது” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அடுத்த செய்தி