ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு... என்ன சொல்கிறார்கள் நெல்லை பெற்றோர்?!

மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் நவம்பர் 16ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

Samayam Tamil 9 Nov 2020, 1:42 pm
தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
Samayam Tamil schools


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் வைரஸ் பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பலகட்ட தளர்வுகளுக்குப் பிறகு, நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் காலை 10 மணிமுதல் நடைபெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள் முகக்கவசம் அணிந்தும் பள்ளிகளின் வாசல்களில் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப் படுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? - மாறி மாறி முடிவெடுக்கும் மாநில அரசுகள்!

இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியை திறக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். நெல்லையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நேற்று மாலையே பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அதில் கருத்துக்களை கேட்டு நிறைவு செய்து விட்டனர். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் நவம்பர் 16ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

அடுத்த செய்தி