ஆப்நகரம்

பெற்றோர் திருமணம் நிச்சயிக்க இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை

திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Feb 2021, 12:51 am
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். பொறியியல் பட்டதாரியான இவரது மகள் கிரிட்டா ( 25), தனியார் வங்கி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
Samayam Tamil இளம்பெண் தற்கொலை
நெல்லை பாளையங்கோட்டையில் இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்


இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு திருமண நிச்சயம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் யாரும் எதிர்பாராத விதமாக, நேற்றிரவு வீட்டின் மாடியில் கிாிட்டா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாளையங்கோட்டை போலீசார், இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி