ஆப்நகரம்

இசக்கிதுரை கொலை வழக்கு... பெரிதாகும் பொதுமக்கள் போராட்டம்

அப்போது ஆட்டோவின் எல்இடி விளக்கு வெளிச்சம் அதிகமாக உள்ளது என்று கூறி சண்முகராஜ் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 17 Dec 2020, 10:09 am
தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ஆட்டோ டிரைவர் கொலையையடுத்து, உறவினர்கள் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil மக்கள் போராட்டம்


தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் இசக்கித்துரை(37) ஆட்டோ டிரைவர். மனைவி சொர்ணமணி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ஆட்டோடிரைவர் இசக்கிதுரை வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து சவாரிக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரெட்டியார்பட்டி ஊத்துமலை ரோட்டில் ஒரு புதிய கட்டடத்தில் இசக்கிதுரை சரமாரியாக வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துமலை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன பிரச்சினை:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்டோடிரைவர் இசக்கி துரை சவாரிக்கு போய்விட்டு திரும்பியபோது அதே பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் எல்இடி விளக்கு வெளிச்சம் அதிகமாக உள்ளது என்று கூறி சண்முகராஜ் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும்: கமல்ஹாசன்

இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று இசக்கிதுரையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ரெட்டியார்பட்டி ஊத்துமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம்:

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் அரசு பணி வழங்க வேண்டும். கொலையாளிகள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் பதிவு செய்ய வேண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரெட்டியார்பட்டியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், சங்கரன் கோவில் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி