ஆப்நகரம்

ரோடு போடுவீங்களா மாட்டீங்களா? போராட்டத்தில் இறங்கிய மக்கள்

பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்கவும், அதுவரையிலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

Samayam Tamil 9 Nov 2020, 4:45 pm
நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நெல்லை டவுன் பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. பின்னர் அங்கு சாலைகளை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளன.
Samayam Tamil people protest


குறிப்பாக, நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீசுவரன் நகர் வரையிலான சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் டவுனில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

அப்போது பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்கவும், அதுவரையிலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி