ஆப்நகரம்

நைட்டி திருடன் அவதாரம் கலைந்தது; தாத்தாவுக்கு துணிச்சல் அதிகம் தான்!

திருநெல்வேலியை பதற வைத்த நைட்டி திருடனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 12 Aug 2021, 2:27 pm
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் முருகேசன் (56). திசையன்விளை பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 04.08.2021 அன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட முதியவர்
கைது செய்யப்பட்ட முதியவர்


மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தள்ளது.

இதுகுறித்து முருகேசன் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் நகைக்கடை, மாவு மில் என பல்வேறு கடைகளில் பணம் மற்றும் பொருள் கொள்ளை போய் இருந்தது.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் வாசகராஜன் என்பவரின் வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த நைட்டியை எடுத்து அணிந்து மர்ம நபர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

எனவே சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நூதன முறையில் பெண் போல் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சேக் மதார் (63) என்பது தெரிய வந்ததுள்ளது.

போராடணும்னா அண்ணா அறிவாலயம் போங்க; திமுகவை சீண்டி வம்பு இழுக்கும் அர்ஜுன் சம்பத்!

இதையடுத்து திசையன்விளை பகுதியில் சுற்றி திரிந்த ஷேக் மதாரை திசையன்விளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான குழுவினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

‘பட்ஜெட் பைலை’ ஓரம் போட்ட பிரதமர் மோடி; ஆசை காட்டி மோசம் செய்ததாக குற்றச்சாட்டு!

மேலும் அவரிடம் இருந்து கடையில் திருடிய செல்போன் மற்றும் ₹16,000 பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 63 வயது முதியவர் நைட்டி அணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி