ஆப்நகரம்

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்; வெளியான பரபரப்பு வீடியோ.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!

நெல்லையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் மீது காவல்துறை அதிரடி வழக்கு பதிவு செய்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Sep 2022, 2:41 pm

ஹைலைட்ஸ்:

  • நெல்லையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரி
  • நடுரோட்டில் வைத்து மிரட்டிய திமுக பிரமுகர்
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்
தமிழ்நாட்டில் சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000 ஆண்டு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலை மூலம் மீன் பிடித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் அதிகாரிகளை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் காவல்துறையினர் முன்பே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் இதனை செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ வைரலானது.

தீப்பிடித்து வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக்; அலறி ஓடிய வீட்டினர்.. நெல்லையில் பரபரப்பு!

அந்தோணி ராய் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதும் அடிக்க கையை ஓங்குவதும் காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் மின்வளத்துறை ஆய்வாளர் உத்தண்டு ராமன் அளித்த புகாரின் பேரில், தற்போது உவரி காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் அந்தோணிராய் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகி நடுரோட்டில் வைத்து அரசு அதிகாரியை மிரட்டிய நிலையில், தற்போது அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி