ஆப்நகரம்

தனிப்படையிடம் சிக்கிய சில்வண்டுகள்… 60 லட்சதிற்கு ஆப்பு!

வாகன சோதனையில் 60 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்.

Samayam Tamil 24 Jan 2022, 6:00 pm
நெல்லை மாநகர பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதி தனிப்படை உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் தலைமையில், போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Samayam Tamil வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் கார்


அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் இரண்டு நபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் ஒரு பை இருப்பதை கண்ட காவல்துறையினர் அந்த பையை சோதனை செய்தபோது, அதில் சுமார் அறுபது லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இந்த பணம் எங்கே இருந்து வந்தது, எதற்காக இவ்வளவு பணத்தை கொண்டு செல்கிறார்கள் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், காரில் இருந்த நபர் முகமது அசாருதீன் என்பதும், அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்ததா திமுக அரசு? பகீர் குற்றச்சாட்டு!

எனவே அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே முகமது அசாருதீனை போலீசார் கண்காணித்து பிடித்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதற்கிடையில் அதிக தொகை என்பதால் பணத்தை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்க போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி