ஆப்நகரம்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் - ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை...

70 வயது பூர்த்தி பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கங்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 12 Apr 2023, 12:54 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தி உள்ளனர். அதேபோன்று, தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்திருந்தது.
Samayam Tamil pensioners protest in nellai collector office
pensioners protest in nellai collector office


6 அம்ச கோரிக்கை

ஆனால், இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாததை கண்டித்தும் திமுக தேர்தல் வாக்குறுதிகள் 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்து இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும் மத்திய மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

அரசுக்கு கடிதம் அனுப்பி வலியுறுத்தல்

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். அப்போது காவல்துறையினருக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு குவிந்தனர்.

அங்குள்ள தபால் பெட்டியில் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர் . முன்னதாக, 6 அம்ச கோரிக்கையை உடண்டியாக நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி