ஆப்நகரம்

போச்சு! குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை

கடந்த 15 ஆம் தேதிதான் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 18 Dec 2020, 11:20 am
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது .இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
Samayam Tamil அருவியில் குளிக்கத் தடை


தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது விழுகிறது.

மெயினருவியில் தண்ணீர் பாதுகாப்பு அளவையும் தாண்டி விழுகிறது. அதேபோன்று பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் குறைவாக உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

குற்றாலத்தில் இனிமேல் இப்படித்தான் குளிக்க வேண்டும்... புதிய கட்டுப்பாடுகள்

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் கடந்த 15-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது இந்நிலையில் இன்று நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி