ஆப்நகரம்

வள்ளியூர் ஆரல்வாய்மொழி அதிவேக விரைவு ரயில்... ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு!

வள்ளியூர் ஆரல்வாய்மொழி அதிவேக விரைவு ரயில் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு இன்று ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Apr 2022, 12:18 pm

ஹைலைட்ஸ்:

  • வள்ளியூர் - ஆரல்வாயமொழி இடையே அதிவேக ரயில்
  • சோதனை ஓட்டத்தின் முன்னோட்டமாக இரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று ஆய்வு
  • பாதை அருகே பொதுமக்கள் நடந்து செல்லவோ, கடந்து செல்லவோ கூடாது‌ என ரயில்வே சார்பில் அறிவுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
நெல்லை வள்ளியூர் - ஆரல்வாயமொழி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தின் முன்னோட்டமாக இரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று டிராலியில் அமர்ந்து ஆய்வு செய்தார்.
மதுரையிலிருந்து நாகர்கோவில் வரையிலான ரயில் மார்க்கத்தில் மின்மயமாக்கலுடன் இரட்டை இரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்ததையடுத்து இன்று வள்ளியூரிலிருந்து ஆரல்வாய்மொழி வரை நடைபெற்ற பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ரயில்வே நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார்.


முன்னதாக அவருக்கு ரயில் நிலையத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் வளாகம் முன்பு மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து சக அதிகாரிகளுடன் டிராலியில் அமர்ந்து ஆரல்வாய்மொழி வரை இரட்டை பாதை பணிகளை ஆய்வு செய்தார்.

20 வருடமாக டாக்டர் வேஷம் போட்ட பெண்... ஊசியுடன் தூக்கிய போலீசார்!

இந்த ஆய்வை தொடர்ந்து நாளை ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை இந்த வழித்தடத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்தப் பாதை அருகே பொதுமக்கள் நடந்து செல்லவோ, கடந்து செல்லவோ கூடாது‌ என்று ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி